கடவுளின் கருணை
UPDATED : ஜூன் 12, 2016 | ADDED : ஜூன் 12, 2016
* அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையன்றி வேறில்லை.* கடவுள் உழைப்பதற்கு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கொடுத்திருக்கிறார்.* எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.* பெரியவர்களின் நல்ல அறிவுரைகளை ஏற்பதே சிறந்தது.- காஞ்சிப் பெரியவர்