உள்ளூர் செய்திகள்

இந்த நாள் நல்ல நாள்

* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து வழிபடுங்கள்.* 'இன்றைய நாள் முழுவதும் நல்ல பொழுதாக அமைய வேண்டும்' என்று தினமும் வேண்டிக் கொள்ளுங்கள்.* புண்ணிய நதிகள், பசு, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர்களை குறைந்தது ஒரு நிமிடமாவது சிந்தியுங்கள்.* வாரம் ஒருமுறையாவது கோயில் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.* அண்டைவீட்டாரையும், மற்ற மனிதர்களையும் அன்புடன் நேசித்து வாழுங்கள்.* சாப்பிடும் முன் மிருகம், பறவைகளுக்கு உணவு அளித்த பின்னரே சாப்பிடுங்கள்.* அன்றாடம் அவரவர் சக்திக்கேற்ப தர்மம் செய்து வருவது நன்மை அளிக்கும்.* நீராடிய பின் நெற்றியில் தவறாமல் திருநீறு, குங்குமம் வைத்துக் கொள்வது அவசியம்.* உறங்கும் முன் அன்றைய நாளில் நடந்த நல்லது, கெட்டதை எண்ணிப் பார்ப்பது நம்மைத் திருத்திக் கொள்ள வழிவகுக்கும்.- காஞ்சிப்பெரியவர்