உள்ளூர் செய்திகள்

நிம்மதிக்கு வழி

* தேவையற்ற ஆசைகளை வளர்த்தால் மன அமைதி குறையும். போதுமென்ற மனம் நிம்மதிக்கு வழிவகுக்கும்.* இன்றைய நாகரிகம் ஆடம்பரமும் உலக இன்பத்தை அனுபவிப்பதையுமே தரமானது என கருதுவது சரியானதல்ல.* பண விஷயத்தில் மட்டும் கணக்காக இருந்தால் போதாது. பேசுவதிலும் கணக்காக இருப்பது நல்லது.* நேர்மை, கருணை, அடக்கம், உழைப்பு, கடவுள் பக்தி போன்ற நற்குணங்களுடன் வாழ்வதே உயர்ந்தது. * உள்ளத்தில் அது வேண்டும், இது வேண்டும் என்ற அரிப்பு மனப்பான்மை கொண்டிருந்தால் மனதில் நிம்மதி இருக்காது.-காஞ்சிப்பெரியவர்