உள்ளூர் செய்திகள்

தரமான வாழ்க்கை எது?

* இறைவனின் அழகு, கருணை, சக்தி, ஞானம் ஆகிய கல்யாண குணங்களை கடைபிடித்தால் நமது தோஷங்கள் நீங்கி நல்லவர்களாகிறோம்.* முளைக்கிற போதே பயிரைக் கவனிப்பது போல, குழந்தைகளாக இருக்கிற போதே, நல்ல ஒழுக்கத்தையும், பக்தியையும் கற்றுக்கொடுத்தால் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.* தனக்கென்று எதுவும் இல்லாவிட்டால், மனதிலுள்ள அழுக்குகள் நீங்கி, மனது கண்ணாடி போல் சுத்தமாக இருப்பதுடன், நிறைந்த ஆனந்தமும் கிடைக்கிறது. எனவே பணத்தை தேடி அலைய வேண்டும் என்பதில்லை.* அதிக பணம் தரும் தொழில், அதிக வியாதி தரும் பழக்கங்களை விட்டுவிட்டு நிம்மதியாகவும், நிறைவாகவும், அளவான ஆசையுடனும் வாழ முயற்சிக்க வேண்டும்.* நிறைவு மனதில் தான் இருக்கிறது என்று உணர்ந்து, எல்லாரும் தம் கடமையைச் செய்து எளிமையாக இருக்க வேண்டும்.* வெளியிலுள்ள பொருட்களில் வாழ்க்கைத்தரம் இல்லை. இருப்பதைகக் கொண்டு நிறைபடைவனே தரமான வாழ்க்கை நடத்துகிறான்.-காஞ்சிப்பெரியவர்