வலிமைக்கு என்ன வழி?
UPDATED : ஏப் 30, 2013 | ADDED : ஏப் 30, 2013
* எங்கும் மின்ஆற்றல் நிறைந்திருந்தாலும், அதை வெளிப்படுத்த ஒரு நிலையம் ஏற்படுத்துவது போல, எங்கும் நிறைந்த அருளை பெற கோயிலை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.* கோயிலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் அனைவருக்கும் அக்கறை தேவை. தூய்மை என்பதில் மனம், உடல் இரண்டுமே அடங்கும். * நம்மிடம் இருக்கும் செல்வம் அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானதே. அதை வைத்துக் கொண்டு நாலுபேருக்கு உதவி செய்ய வேண்டும். * பதினைந்து நாளைக்கு ஒருமுறை விரதம் இருக்க வேண்டும். இதனால், உடலும், மனமும் வலிமை பெறும்.* நியாயம் என்றால் முறை என்று பொருள். எந்தச் செயலையும் முறையுடன் செய்ய வேண்டும். முறை தவறும் போது துன்பம் தான் உண்டாகும்.* நமக்கு நியாயமாகத் தோன்றுவதை செய்வது கூடாது. எல்லோருக்கும் பொதுவான நியாயத்தை பின்பற்றுவதே சரியான நெறிமுறை.- காஞ்சிப்பெரியவர்