எல்லாரும் கடவுளே!
UPDATED : மார் 26, 2015 | ADDED : மார் 26, 2015
* அறிவு வளர வளர மனிதன் அடக்கமுடன் இருக்க வேண்டும். இதுவே அறிவின் அடையாளம்.* குலத்தால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது கூடாது. குணத்தால் மனிதனை அளப்பதே சிறந்தது. * குடும்பம் என்னும் வண்டிக்கு கணவனும், மனைவியும் சக்கரம் போல இயங்க வேண்டும். * துன்பம் இன்றி வாழ நினைத்தால், எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்றுங்கள்.* தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், வாழ்வதில் அர்த்தமில்லை. -வாரியார்