மனிதத்தன்மை இழக்காதீர்
UPDATED : ஜூன் 21, 2016 | ADDED : ஜூன் 21, 2016
* உருவத்தால் மட்டுமின்றி உள்ளத்தாலும் மனிதத்தன்மையுடன் நாம் நடக்க வேண்டும். மிருகங்கள் போல செயல்படக்கூடாது.* பணம் சேரச் சேர மனிதனுக்கு பசி, துாக்கம், ஒழுக்கம், பக்தி என எல்லாமே குறைந்து விடும்.* மனிதனின் மனக்கோணலை நேராக்கி நல்வழிப்படுத்துவதே நல்ல நூல்களின் பயனாகும்.* ஒருவர் வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்ததே ஆகும்.- வாரியார்