நன்றி மறவாதீர்!
UPDATED : ஜூன் 10, 2014 | ADDED : ஜூன் 10, 2014
* கோபம் வரும் போது கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். உங்களுக்கே வெட்கமாகப் போய் விடும். * ஆபத்தான சமயத்தில் உயிரைக் காபாற்றிக் கொள்ளச் சொல்லும் பொய் குற்றமாகாது. * முதுமைக்குத் தேவையானதை இளமையில் தேடுவதே அறிவுள்ளவனின் செயல். * எந்த பாவம் செய்தாலும் தப்பித்து விடலாம். ஆனால், நன்றி மறந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. * செய்த பாவமும், புண்ணியமும் பல மடங்காகப் பெருகி நம்மிடமே திரும்பி வரும். - வாரியார்