உள்ளூர் செய்திகள்

நெஞ்சிலே அன்புவை!

* பிறர் படும் துன்பத்தைக் கண்டு வருந்துவதோடு, உதவ முன்வருவதே அறிவு இருப்பதன் அடையாளம்.* துன்பத்தில் கொடிய துன்பம், கடனாளியாக வாழ்வதே. இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ முயல வேண்டும்.* நீண்டநாள் வாழ்வதைக் காட்டிலும், இருக்கும் வரை ஆரோக்கியத்துடன் வாழ்வதே நல்லது.* கடவுளிடம் அன்பு வைக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் ஆசை வைப்பது கூடாது.* உருகிய தங்கத்தில் நவமணிகள் பதிவது போல, உருகிய உள்ளத்தில் கடவுளின் அருள் பதிந்து விடும்.- வாரியார்