உள்ளூர் செய்திகள்

முழுமனதுடன் சேவை செய்!

* கடனை பாக்கியில்லாமல் தீர்த்து விட வேண்டும். சிறிது மிச்சம் வைத்தாலும் வட்டி சேர்ந்து பெருகி விடும்.* தர்மத்தில் செலவழித்த பணமே நம்முடைய பணம். * அன்பு, அடக்கம், பொறுமை, கருணை, அமைதி போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* இறைவன் நமக்குப் புரிவது அனைத்தும் அருள் தான். சோதனைகள் கூட அனுபவப்பாடம் கற்கத்தான். சோதனைகளை <வாழ்வின் படிக்கல்லாக மாற்றிக் கொள்ளுங்கள்.* மனம் சுளிக்காமல் சேவை செய்வதில், அனுமனைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.* உணவு, உறக்கம், பொருளாசை என எப்போதும் சிந்திந்துக் கொண்டிருப்பவன் மனிதனாக மாட்டான். பண்புநெறி தவறாமல் அறவழியில் நடப்பவனே சிறந்த மனிதன்.* மனிதனையும் விலங்கையும் பிரிக்கும் எல்லைக்கல்லே பக்தி. பக்தி இல்லாத மனிதன் அறிவாளியாக இருந்தாலும் விலங்குக்குச் சமம் தான்.- வாரியார்