உள்ளூர் செய்திகள்

எது நம்முடைய பணம்?

* கடனைச் செலுத்துவதாக இருந்தால், பாக்கி இல்லாமல் தீர்த்து விட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் கடன் வளர்ந்து விடும்.* தர்மத்தில் செலவழித்த பணம் தான் நம்முடைய பணம். அது மறுபிறவியில் நமக்கு துணை செய்யும்.* மனிதன் நற்குணங்களான அன்பு, அடக்கம், கருணை, பொறுமை, அமைதி ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள முயலவேண்டும்.* சோதனையும் நமக்கு ஒரு அனுபவம் தான். அதையும் வாழ்வின் படிக்கல்லாக மாற்றி முன்னேற வேண்டும்.- வாரியார்