உள்ளூர் செய்திகள்

வாழ்வின் உயிர்நாடி எது?

* உன்னைப் புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. இகழும்போது கவலையும் அடையாதே. * மரம் தன்னை நாடி வருபவருக்கு நிழல் தந்து உதவுவது போல, மனிதனும் தன்னை நாடி வந்தவருக்கு உதவ மறுப்பது கூடாது.* தூய உணவை உண்ணும்போது தூய எண்ணம் உண்டாகும். அதனால், உணவு சமைக்கும் போது நல்லெண்ணத்துடன் சமைக்க வேண்டும்.* உலகில் செய்த தர்மம் ஒன்றே என்றென்றும் அழிவில்லாமல் இருக்கும். பொன், பொருள் போன்ற செல்வம் நம் கண் முன்னே காணாமல் போய் விடும்.* பசுவைப் போன்ற நல்லவர்களிடம் பழகுங்கள். பாம்பு போன்ற கொடியவர்களிடம் விலகி நில்லுங்கள். * பணிவுடைமை மனித வாழ்வின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத் தரம் உயர்வு அடைகிறது. * போற்றுதலையும், தூற்றுதலையும் சமமாகக் கருதுபவர்களின் உ<ள்ளத்தில் அமைதி குடியிருக்கும்.* பிறருடைய குற்றங்களை அலசி ஆராய்வது கூடாது. நாம் செய்த குற்றத்தை மூடி மறைப்பது கூடாது.- வாரியார்