நம்பிக்கை என்னும் தாய்
UPDATED : நவ 02, 2015 | ADDED : நவ 02, 2015
* எப்போதும் உண்மையை மட்டுமே பேசுபவன், தாய் போல நம்பிக்கைக்கு உரியவனாகத் திகழ்வான்.* செய்த தவறை ஒத்துக் கொள்வதால் மனதில் சுமை குறைவதோடு, பால் போல தெளிவும் உண்டாகும்.* ஏமாற்றுதல் என்பது சிறிய முள் தான் என்றாலும், அதைப் பிடுங்கி எறிவது மிக கடினம்.* பேச்சைக் குறைத்து மவுனமாக இருந்தால், மனம் கலங்காத நிலையை அடையலாம்.* நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்லறிவு ஏற்படாது. நல்ல அறிவின்றி நல்ல ஒழுக்கமும் வாய்க்காது.-மகாவீரர்