எல்லாரும் நம் சகோதரரே!
UPDATED : மே 28, 2013 | ADDED : மே 28, 2013
* எறும்பும், தேவதூதனும் ஒன்று தான். புழுவும் கூட கடவுளின் உடன்பிறப்பே. எந்த உயிரிடத்தும் உயர்வோ, தாழ்வோ இல்லை. * நமது உள்ளங்களை நம் எப்போதும் திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்தில் உள்ள நல்ல நினைவுகள் அனைத்திற்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.* அன்பே உலகில் மேலானது. யோகப்பயிற்சியை விட அன்பே உயர்ந்தது. * பிறரைத் துன்புறுத்துவது எளிது. எழுகின்ற கையைத் தாழ்த்தி அமைதியாய் நிற்பது மிகவும் கடினமானது.* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெல்வதற்காகவே. அதற்குப் பணிந்து போவதற்கு அல்ல.* இந்த மண்ணுலகம் பெரிய பயிற்சிக்கூடம். நம்மை வலிமையுள்ளவர்களாக்கிக் கொள்வதற்காகவே இங்கு நாம் அனைவரும் வந்திருக்கிறோம்.* வழிபாட்டில் கடவுளை நம் பெற்றோராக ஏற்றுக் கொண்ட பிறகு, அன்றாட வாழ்வில் சந்திக்கும் அனைவரையும், நம் சகோதரர்களாக ஏற்க தயங்கக்கூடாது. - விவேகானந்தர்