நல்லறிவு வேண்டுங்கள்
UPDATED : ஏப் 11, 2017 | ADDED : ஏப் 11, 2017
* தினமும் சிறிது நேரம் வழிபாட்டில் ஈடுபடுங்கள். நல்லறிவுக்காக பிரார்த்தியுங்கள்.* ஏழைகளுக்கு கொடுத்து மகிழாமல், மனிதன் சுயநலத்துடன் இருப்பது கூடாது.* தன்னைப் பற்றி எண்ணாத நேரத்தில், மனிதன் உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறான்.* தலைவனாக இருந்து பிறருக்கு வழி காட்டுவதை விட, சேவகனாக தொண்டு செய்வது மிக அவசியம்.* மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒருபோதும் நடப்பதில்லை.- விவேகானந்தர்