கொடுத்தால் கிடைக்கும்
UPDATED : செப் 07, 2014 | ADDED : செப் 07, 2014
* நல்வழியில் நடக்கும் ஒவ்வொருவருக்கும் கை கொடுக்கத் தயாராக இருங்கள்.* இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் ஒன்றை விட்டுச் செல்லுங்கள்.* துன்பம் அற்ற இன்பம், தீமை இல்லாத நன்மை இதெல்லாம் அடைய முடியாதவை ஆகும்.* மற்றவர்களை எதிர்பார்த்து நடப்பவன் சத்தியத்தை பின்பற்றி நடப்பது என்பது இயலாது.* அரிய செயல் எதுவானாலும் அதற்கு விலையாக பெரிய உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும்.- விவேகானந்தர்