உள்ளூர் செய்திகள்

தைரியமாக இருங்கள்

* மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது.* திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். அது போதும்.* கோழை தான் வாழ்வில் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.* மக்களிடம் உண்மையான சமத்துவம் எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.* சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.* மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.* சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.* பிரதிபலன் பாராமல் நன்மை செய்யுங்கள்.- விவேகானந்தர்