நம்பிக்கையுடன் இரு!
UPDATED : ஜன 21, 2016 | ADDED : ஜன 21, 2016
*கத்திமுனையில் நடப்பதைப் போல பாதை கடினமானதாக இருந்தாலும் வாழ்வில் நம்பிக்கை இழப்பது கூடாது.* தெய்வீகத் தன்மை இல்லாத அறிவும் ஆற்றலும் மனிதனை மிருகமாக்கும்.* ஒழுக்கம் என்பது மிருக இயல்பை தெய்வீக இயல்பாக மாற்றிக் கொள்வதேயாகும்.* நல்லவர்கள் செய்த தியாகத்தின் பயனை இந்த சமுதாயமே அனுபவிக்கிறது. அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள் இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. அதை நாம் விழிப்படையச் செய்ய வேண்டும்.-விவேகானந்தர்