நல்லவனாக இரு!
UPDATED : ஜன 18, 2015 | ADDED : ஜன 18, 2015
* பெரிய உழைப்பு என்னும் விலை இல்லாமல் அரிய செயல்கள் எதையும் செய்து விட முடியாது.* பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. நன்மையும், தெய்வ பக்தியுமே நமக்கு போதுமானது.* நற்செயல்களில் நாம் முழுமூச்சுடன் ஈடுபட்டால் கடவுளின் துணை நிச்சயம் கிடைக்கும்.* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்பவனே அறிவாளி.* நல்லவனாக இரு. பிறருக்கு நன்மையை மட்டுமே செய். இது தான் ஆன்மிக வாழ்வின் அடிப்படை.- விவேகானந்தர்