உள்ளூர் செய்திகள்

தவறுகளையும் வாழ்த்துங்கள்!

* மனதில் தூய்மையான எண்ணங்களை மட்டும் அனுமதியுங்கள். நல்ல செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள். தீய விஷயங்கள் தலைகாட்டாதபடி இருப்பதற்கு இது ஒன்றே வழி.* பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால், வட்டியும் முதலுமாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடும். * நல்லவனாக இருங்கள். பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள். ஆன்மிக வாழ்வில் உயர்வதற்கான வழி இது மட்டுமே.* பண்டைக்காலத்தில் வாழ்விற்குரிய விதியாக தியாகம் கருதப்பட்டது. இனி வரப்போகும் பலகோடி நூற்றாண்டு காலத்திற்கும் இந்த விதி பொருந்தும். * செய்த தவறுகளை வாழ்த்துங்கள். அவை, <உங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கின்றன.* எது நல்லதென்று மனதிற்குப் படுகிறதோ அதை மட்டுமே செயல்படுத்துங்கள்.- விவேகானந்தர்