உள்ளூர் செய்திகள்

இயற்கையை வெற்றி கொள்!

* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். * மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.- விவேகானந்தர்