எது வந்தாலும் போராடு!
* உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவை தான் செய்ய முடியும். உயிர்களுக்கு தொண்டு செய்பவன் கடவுளுக்கே தொண்டு செய்தவன் ஆவான்.* நீ செல்லும் பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடினமானது தான் என்றாலும், மனம் தளராமல் குறிக்கோளை நோக்கி முன்னேறு.* தோல்வியைத் தழுவி உயிர்வாழ்வதை விடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.* மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். மூளை, தசை, நரம்பு என உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்.* எது வந்தாலும் போராடிக் கொண்டிரு. கோழையாவதனால் நீ எந்த ஒரு பயனையும் பெற மாட்டாய்.- விவேகானந்தர்