உண்மையைப் பின்பற்றுங்கள் (2)
UPDATED : ஜூன் 01, 2014 | ADDED : ஜூன் 01, 2014
* இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்ய முயலுங்கள். அமைதியோடும், மன ஈடுபாட்டோடும் பணியில் ஈடுபடுங்கள்.* கடவுளை நம் தந்தையாக ஏற்றுக் கொண்ட பிறகு, மற்றவர்களை சகோதரர்களாக கருதாமல் இருப்பது கூடாது.* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். கோழையாகவும், கபடதாரியாகவும் இராதீர்கள்.* எல்லா வகையிலும் விரிவடைய முயலுங்கள். உயிர்க்கு ஒரே அறிகுறியாவது வளர்ச்சி என்பதை நினைவில் வையுங்கள்.- விவேகானந்தர்