உள்ளூர் செய்திகள்

விரிந்த உள்ளம் வேண்டும்

* நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற ஆற்றலும், தூய்மையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கின்றன. * என்னால் முடியும் என்று நினைத்து செயலாற்றினால் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.* மனிதனைப் பிணைத்திருக்கும் பந்தம் என்னும் கட்டுகள் அனைத்தும் கடவுளின் கருணையால் மட்டுமே அவிழும்.* தூய்மையான நல்லெண்ணம் கொண்டவர்கள் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காணும் பேறு பெறுவர்.* உலகத்தைப் போல நம் உள்ளமும் பரந்து விரிந்ததாக இருக்கட்டும்.* மனிதனை உருவாக்குவதில் இன்ப துன்பம் இரண்டும் சமமான இடத்தைப் பெறுகின்றன.* தன்னைச் சரிபடுத்திக் கொண்டால் உலகையும் சரிப்படுத்தும் தகுதியைப் பெற முடியும்.* இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசானாக இருந்து நமக்கு வழிகாட்டுகிறது.* மனித உயிர் தெய்வத்தன்மை கொண்டது. ஆனால், ஜடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டு கிடக்கிறது.- விவேகானந்தர்