உடல் உழைத்து தேயட்டும்!
* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு 'எதிர்ப்பது' என்றே பொருள்.* ஒரு நல்ல லட்சியத்தை ஏற்றுக்கொண்டு, அதை அடைவதற்காக தைரியத்துடன் போராடும் வெற்றி வீரனாகத் திகழுங்கள்.* நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். எதையும் சாதிக்கக் கூடிய வலிமை நமக்குள் இருக்கிறது.* நல்லவழியில் செல்வத்தைத் தேடுவதும், அதை பிறருக்கு உதவும் வகையில் செலவழிப்பதும் மட்டுமே கடவுளுக்குரிய வழிபாடு.* உடல் உறுப்புகள் துருப்பிடித்துத் தேய்ந்து போவதை விட, உழைத்துத் தேய்வது மேலானது.* உலகம் ஏளனம் செய்வதை பொருட்படுத்த வேண்டாம். லட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருங்கள்.* மற்றவை எல்லாம் மரணத்தோடு நம்மை விட்டு நீங்கிவிடும். ஆனால், நல்லொழுக்கம் மறுபிறவியிலும் நம்மைத் தொடர்ந்து வரும்.* செயலின் பயனில் மட்டும் கருத்தைச் செலுத்தாமல் செய்யும் முறையிலும் கவனம் வைப்பது அவசியம்.- விவேகானந்தர்