உள்ளூர் செய்திகள்

ஆர்வம் பிறக்கட்டும்!

* ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய சுமை முழுவதும் அவரவர் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிச் செயலாற்றுங்கள். * வேதாந்தம் கூறும் தர்மநெறி முறைகளை வீட்டுக்கு வீடு சென்று எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொருவரிடமும் இருக்கும் தெய்வீகத்தன்மையை உணர வழி காட்டுங்கள்.* கொழுந்து விட்டெரியும் ஆர்வத்தை நாலாபுறங்களிலும் பரவ விடுங்கள். பரபரப்புடன் பணியில் ஈடுபடுங்கள். பொதுநலத்துடன் தொண்டாற்றுங்கள். * நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். நிமிர்ந்து நின்று துணிவுடன் நடை போடுங்கள்.* தூய்மையுள்ளவராக நீங்கள் இருந்தால், தூய்மை இல்லாததைப் பார்க்க முடியாது. ஏனென்றால், உண்மையில் உள்ளே இருப்பது தான் வெளியிலும் நமக்குத் தெரிகிறது.* கண்டனம் செய்யும் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள். - விவேகானந்தர்