மனஅமைதியுடன் வாழுங்கள்
UPDATED : மார் 31, 2013 | ADDED : மார் 31, 2013
* நல்லவனாக இருந்து மற்றவர்களுக்கு இயன்ற நன்மைகளைச் செய்து வருவதே ஆன்மிக வாழ்வின் அடிப்படை நெறிமுறை.* பகை, பொறாமை போன்ற தீயகுணங்களை வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடும்.* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் உயர்த்துவதே சமயத்தின் நோக்கம்.* எந்தக் காலத்திற்கும் தியாகம் தான் வாழ்விற்குரிய விதியாக இருக்கப் போகிறது.* மன அமைதி பெற்று வாழ்வது தான் மதங்களின் அடிப்படை லட்சியம். மதத்தின் பெயரால் மனிதன் சச்சரவு செய்வது கூடாது. * இந்த உலகம் ஒரு பெரிய உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமையுடையவர்களாக்கவே நாம் வந்திருக்கிறோம்.* தெய்வீகத்தன்மை இல்லாத மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதனை கீழ்நிலைக்குத் தள்ளிவிடும் சக்தி படைத்தவை.- விவேகானந்தர்