உள்ளூர் செய்திகள்

பொறுமையே உயர்ந்தது

* உலகிற்கு நன்மை செய்யவே நாம் பிறந்திருக்கிறோம். நமது பெயர்களைப் பறை சாற்றுவதற்காக அல்ல.* பூமாதேவியைப் போன்று பொறுமை வேண்டும். பொறுமை மிக்கவன் காலடியில் இந்த பூமியே அடிபணியும்.* வளர்ச்சியடைவதே உயிர் வாழ்வதன் அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கிடைப்பதை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.* அன்பே உயர்ந்தது. அறிவும், தியானமும், ஞானமும் அதற்கு ஈடாகி விட முடியாது.- விவேகானந்தர்