உள்ளூர் செய்திகள்

உள்ளத்தை ஒழுங்குபடுத்து!

* உங்களுக்கு வருகிற துன்பம் எதுவென்றாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.* உலகத்தில் உள்ள தீமைகளைப் பற்றி வருந்த வேண்டாம். உங்கள் உள்ளத்தில் இருக்கும் தீமையைப் போக்க வழிகாணுங்கள்.* உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால், எல்லா இடத்திலும் கடவுளைக் காண்பீர்கள்.* பாவ எண்ணமும், பாவச் செயலும் ஒன்று தான். அதனால், தீய எண்ணமும் கூட ஒருவனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறவாதீர்கள்.* சுதந்திரம் இல்லாத வரையில் ஒரு மனிதனிடம் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.* உயிர் போகும் வேளையில் கூட, ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம். * தன்னை அடக்கக் கற்றுக் கொண்டவன் தரணியையே அடக்கும் வலிமை பெறுகிறான்.* நேர்மை, அக்கறை உணர்வுடன் ஈடுபடும் எந்த விஷயத்திலும் சாதனை நிகழ்த்த முடியும்.- விவேகானந்தர்