நல்லதைப் பேசுங்கள்!
UPDATED : ஆக 08, 2013 | ADDED : ஆக 08, 2013
* உலக இயந்திரத்தின் சக்கரங்களில் இருந்து தப்பி ஓட நினைக்காதீர்கள். அதன் உள்ளே நின்று கொண்டு கடமையை செய்து கர்மயோகத்தின் ரகசியத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.* சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை திருத்தி அமைத்துக் கொள்வது தான் வெற்றிகரமான வாழ்விற்குரிய முழுமையான ரகசியம்.* பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல், உலகிற்குச் செலுத்தும் ஒவ்வொரு நல்லெண்ணமும், நமது கர்மச்சங்கிலி இணைக்கும் கண்ணி ஒன்றை உடைத்து எறிகிறது. இதனால் பிறவித்தளை அறுபடுகிறது.* எப்போதும் புனிதமான நல்ல எண்ணங்களைச் சிந்தியுங்கள். பிறருக்குப் பயன்படும் நல்ல விஷயங்களைப் பேசுங்கள். நல்ல பணிகளில் ஈடுபட்டு உலகிற்கு நன்மை செய்யுங்கள்.* சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றாக விளங்கினால் உலகையே ஆட்டி வைக்க முடியும்.- விவேகானந்தர்