உள்ளூர் செய்திகள்

சொந்தக்காலில் நில்லுங்கள்

* ஒருவனுக்கு தன்னம்பிக்கையே அடிப்படை. அதில் இல்லாதவன் தெய்வ பக்தி இல்லாத நாத்திகனைப் போன்றவன்.* விடாமுயற்சி மட்டும் நம்மிடம் இருந்துவிட்டால் நம்மால் சாதிக்க முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.* என்னால் முடியாது என்று ஒருபோதும் சொல்வது கூடாது. எல்லாவற்றையும் சாதிக்கக்கூடிய வல்லமை நம்மிடம் இருக்கிறது.* சுயநலம் என்பது சிறிதும் மனதில் இருப்பது கூடாது. அதை தூர எறிந்துவிட்டு ஆக்கப் பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்.* நீங்கள் சிங்கம் போன்றவர்கள். செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளிவிட்டு உற்சாகத்துடன் செயலாற்றுங்கள்.* தன்னைத்தானே தாங்குபவனாக, சொந்தக்காலில் தலைநிமிர்ந்து நிற்கும் பலமுள்ளவனாக செய்ய வல்ல கல்வித்திட்டம் நமக்குத் தேவை. * உயர்ந்த லட்சியங்களை மனதில் உருவாக்குங்கள். எப்போதும் அதை அடைவதற்கான சிந்தனையில் ஈடுபடுங்கள்.* சிந்திப்பதை செயல்படுத்தும் துணிவையும், மனவலிமையையும் தியானத்தின் மூலம் நம்மால் பெற முடியும்.- விவேகானந்தர்