உள்ளூர் செய்திகள்

பெண்ணுக்கு ஆபரணம் எது?

* வாழ்வில் ஒரு நன்மையாவது செய்யுங்கள். அதனால், பாவம் அனைத்தும் தீர்ந்து விடும். * பிறவிப்பிணி நீங்க வேண்டுமானால், ஆசையின் சாயலே அற்றுப் போய் விட வேண்டும். வேறெந்த முயற்சியும் வீணானவை தான்.* யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டுஇருக்கட்டும். எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதை கடவுளின் வழியில் செய்து கொண்டிருங்கள்.* பெண்ணுக்கு நாணமே ஆபரணம். அது இல்லாத பெண்ணைப் பெண் என்றே சொல்ல முடியாது. * ஆசையை யாராலும் விலக்க முடியாது. உடம்பு என்ற ஒன்று இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். ஆனால், அதை கட்டுக்குள் வைக்க வேண்டும். * 'கடவுள் என்னுடையவர்' என்ற சிந்தனையை விதைப்பதற்கு ஏற்றது குழந்தைப் பருவமே. பக்தியை குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொடுங்கள். * தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார். - விவேகானந்தர்