உள்ளூர் செய்திகள்

ஏழைகளின் கண்ணீர்

* ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும். * இறைவன் தன் அடியாருக்கு தெளிவான வசனங்களை சொல்கிறான். உங்களை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக. * பணக்காரராக மாற வேண்டும் என பேராசைப்படாதீர்கள். மீறினால் நேர்மையை இழந்துவிடுவீர்கள். * எவர் பரிந்துரையுமின்றி அவனை நேராக நெருங்க முடியும். அவனிடம் உதவிகோர முடியும். * மனதில் நினைக்கும் செயல்கள் பிறர் அறிவதை நீங்கள் விரும்பவில்லையெனில் அது பாவச் செயல். * பிறரை தண்டிக்கும் சக்தி பெற்றிருந்தும் மன்னிப்பவரே உயர்ந்த மனிதர். * அநாதைகளுடைய உடைமை பொருட்களை அவர்களிடமே திருப்பி கொடுத்துவிடுங்கள்.