உள்ளூர் செய்திகள்

எண்ணத்தின் வெளிப்பாடு

* எண்ணத்தின் அடிப்படையில் செயல்கள் அமையும். * இடது கையால் எதையும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. * பிறர் துன்பப்படுவதை பார்த்து சிரிக்காதீர்கள். * தண்ணீர், நெருப்பு, நிலம் அனைவருக்கும் பொதுவானது. * பொய் சாட்சி கூறுவது பெரும்பாவம். * இறைவனை தவிர வேறு யார் மீதும் சத்தியம் செய்யக்கூடாது. * நேர்வழியை பின்பற்றுபவர்கள் பயப்படவோ, துன்பப்படவோ மாட்டார்கள். * யாரிடமும் அருவெறுப்பு கொள்ளாதே. * தர்மத்தை ரகசியமாக செய். * யாரிடமும் தவறாக பேசாதீர். * கற்ற கல்வியை பிறருக்கு சொல்லிக்கொடுங்கள். * கோபப்படும்படியான செயல்கள் நடக்கும்போது மவுனமாக இருங்கள். * பொய்பேசுபவர் நோன்பு இருந்தால் அதற்கான பலன் கிடைக்காது. * உள்ளத்தை உறுத்தும் செயலை செய்யாதீர்கள். * தர்மம் செய்தால் செல்வம் குறையாது. - பொன்மொழிகள்