சிந்தனை செய் மனமே!
UPDATED : ஏப் 06, 2023 | ADDED : ஏப் 06, 2023
* மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட, இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள். * நீங்கள் செய்த நன்மைகளை சிந்திப்பதை விட, உங்களால் நிகழ்ந்த பாவங்களைச் சிந்தியுங்கள்.* நீங்கள் உயிருடன் வாழப் போவதை சிந்திப்பதை விட, வருகின்ற மரணத்தைப் பற்றியும் சிந்தியுங்கள்.* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட, உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.* உப்பை நீர் கரைப்பது போல, நற்குணம் பாவங்களைக் கரைத்து விடும். * உன் வாயிலாக ஒரு மனிதனுக்கு நன்மை நடந்தால், உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.* எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகிறாரோ அவர் இறைவனைத் துன்புறுத்தியவர் ஆவார்.-பொன்மொழிகள்