மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, குழந்தைகளுக்கான உள்நோயாளிகள் வார்டின், நுழைவாயில் வாசற்படியின் மேல் பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருந்தது. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில், கான்கிரீட் பெயர்ந்து உள்ள பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது.