உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  குருவாயூர் கோவிலுக்கு 27 சவரன் கிரீடம் காணிக்கை

 குருவாயூர் கோவிலுக்கு 27 சவரன் கிரீடம் காணிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு: கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 27 சவரன் தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு, வெளிநாட்டில் பணியாற்றும் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷோமகிருஷ்ணன் என்பவர், 27 சவரன் தங்க கிரீடத்தை காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார். கோவில் நிர்வாக குழு தலைவர் விஜயன், நேற்று நடந்த நிகழ்ச்சியில் கிரீடத்தை பெற்றுக் கொண்டார். குருவாயூர் கோவிலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உட்பட பலர், தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பிரேம்ஜி
ஜன 02, 2026 07:52

குருவாயூர் அப்பா! பத்திரமாக வைத்துக் கொள்! அப்புறம் அய்யப்பன் கோயில் கவசம் போல் காணாமல் போய் விடக்கூடாது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை