உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  நீட் தேர்வில் விழுப்புரம் மாணவர் மாநில அளவில் முதலிடம்

 நீட் தேர்வில் விழுப்புரம் மாணவர் மாநில அளவில் முதலிடம்

விழுப்புரம்: நீட் தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வேங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு மறு தேர்வு கடந்த ஜூன் 21ம் தேதி நடந்தது. இந்த தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் நள்ளிரவு தேசிய தேர்வு மு கமை வெளியிட்டது. அதன்படி, நீட் நுழைவுத் தேர்வில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வேங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12வது இடமும் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். இவர், விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை டாக்டர் அஞ்சன் ராமச்சந்திரநாத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பொன்னேரியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பிளஸ் 2 படித்த வேங்கடபதி வேலாயுதம், நீட் நுழைவு தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்களையும், கட் ஆப் அடிப்படையில் 99.99915 சதவீத மதிப்பெண்களையும் பெற்று, சாதனை படைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rasu
ஜூலை 20, 2026 12:04

அந்த பையனோட அப்பா விழுப்புரத்துல பெரிய எலும்பு மூட்டு டாக்டர் அவர் பையனுக்கு எல்கேஜ் ல இருந்து லட்சகணக்குல பணத்த கட்டி படிக்க வைச்சாறு அதன் பலன் முதல் ரேங் ஏழைங்க எங்க போவாங்க


Subramanian
ஜூலை 19, 2026 08:00

வாழ்த்துகள்


raju
ஜூலை 19, 2026 05:54

நல்லது நடந்தா மட்டும் பள்ளியின் பெயரை போடுவார்கள் இதே ஏதேனும் அசம்பாவித செய்தி என்றால் தனியார் பள்ளி என்று வரும் வாழ்க பத்திரிகை சுதந்திரம்


manian
ஜூலை 18, 2026 19:35

Rich or poor hardwork pays


Barakat Ali
ஜூலை 18, 2026 19:28

ஏன் தம்பி ....... திராவிடத்துக்கு எதிரா ஆரியத்துக்கு விலை போயிட்டீங்களே ?? நீட் தேர்வை கண்டிச்சு போராட்டம் பண்ணாமே நீட் ல சாதனை பண்ணிட்டீங்களே .......


Arul Narayanan
ஜூலை 18, 2026 14:05

. 99.9915 சதவீத மாணவர்கள் இவரை விட குறைவாக மதிப்பெண் பெற்றுள்ளனர். பர்சன்டைல் என்றே குறிப்பிடலாம். புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.


Ramesh Sargam
ஜூலை 18, 2026 13:15

நீட் தேர்வில் மாணவர்கள் சாதிக்கிறார்கள். ஆனால் நீட் வேண்டாம் என்று அரசியல் கட்சியினர் மட்டும் ஏன் அந்த நீட் முறையை எதிர்க்கிறார்களோ தெரியவில்லை? அந்த விழுப்புரம் மாணவருக்கு வாழ்த்துக்கள்.


MARUTHU PANDIAR
ஜூலை 18, 2026 10:27

பிள்ளை என்றால் பிள்ளை. இப்படி அல்லவா இருக்க வேண்டும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை