உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  தீட்டிய மரத்தில் கூர் பார்க்கலாமா?

 தீட்டிய மரத்தில் கூர் பார்க்கலாமா?

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், அ.ம.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ். ஜெயித்ததும், த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்ததால், அவரை கட்சியில் இருந்து அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் நீக்கினார். சட்டசபையில் சமீபத்தில் காமராஜ் பேசுகையில், 'தமிழ கத்தில் 60 ஆண்டுகளுக்குப் பின் முதல்வர் விஜயால் மாற்றம் வந்தது. அதேபோல, கர்நாடகாவிலும், மத்தியிலும் காங்கிரஸ், பா.ஜ., அல்லாத அரசு அமைய வேண்டும். அப்போது தான் காவிரி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்' என்றார். இதற்கு பதிலடி தந்து, திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செல்வம் அளித்த பேட்டியில், 'தேசிய ஜனநாயக கூட்டணியால் தான் காமராஜ் வெற்றி பெற்றார். அவர் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றதாக நினைத்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என்றார். இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'இவர் சொல்றது சரிதானே... தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல காமராஜ் பேசலாமா...?' என முணுமுணுத்தபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

panneer selvam
ஆக 20, 2026 17:19

Bothirajan is still remain as BJP MLA and he did not switch the party where AMMK party MLA story is totally different . He left his party and joined TVK just after election


Anantharaman Srinivasan
ஆக 20, 2026 15:15

இன்று தவெக அரசில் ஒட்டிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கம்யூனிட்கள் விசிக என அனைவரும் திமுக என்ற தீட்டிய மரத்தயே கூர் பார்த்துள்ளனர்.


Lakshminarasimhan
ஆக 20, 2026 08:12

அப்போ பா ஜ க சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் கதையும் இதுவே அவரும் தேசிய ஜனநாயக கூட்டணி வாயிலாக தேர்தலில் வெற்றி பெற்றார் எனவே அவரும் ராஜினாமா செய்யணும்