உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  சீமானையே மிஞ்சிட்டாரே!

 சீமானையே மிஞ்சிட்டாரே!

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக, பாண்டி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது அறிமுக கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், பாண்டி பேசுகையில், '234 தொகுதிகளிலும் சீமான் வீசிய துப்பாக்கி குண்டுகளில் ஒன்றாக, இங்கு வந்து விழுந்திருக்கிறேன். நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால், கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு, தனி மாவட்டம் உருவாக்கப்படும். 'கோவில்பட்டி நகராட்சியை, மாநகராட்சியாக மாற்றுவோம். கயத்தாறு பேரூராட்சியை, நகராட்சியாக மாற்றுவோம். நான் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், ஏழாவது மாதம் என் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்' என்றார். இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'சவால் விடுவதில், நம்ம தலைவர் சீமானையே, பாண்டி மிஞ்சிட்டாரே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
மார் 12, 2026 18:56

ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் புளுகுராங்க..


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
மார் 12, 2026 10:54

உதவாநிதி கொடுத்த தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வை உச்சநீதிமன்ற உத்தரவு ரத்து செய்வோம் என்பதை நம்பும் நாம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதை முடியாத வாக்குறுதி என்று கூறுகிறோம். ஆட்சியை பிடிக்க 50 ஆண்டுகளாக தொடர்ந்து பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதையே தொழிலாக கொண்டுள்ள திராவிடியா ஓங்கோல் திருட்டு கூட்டத்தை நம்பும் நாம், வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால் தனது பதவியை கூட ராஜினாமா செய்கிறேன் என்று உறுதிமொழி கொடுக்கும் நமது அண்ணன் தம்பிகளை குறை கூறி ஆதரிக்க மறுக்கிறோம். சீமான் கூறுவது போல் நாம் சீமானை தேர்ந்தெடுக்கவிட்டால் இழப்பு சீமானுக்கல்ல. நமக்கும் நமது சந்ததிகளுக்கும்தான்.


D.Ambujavalli
மார் 12, 2026 06:22

இந்த மாதிரி , நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைத் தரும் தலைவர்களை, எழுத்துமூலம் ஆவணப்படுத்தி, நிறைவேற்ற காலக்கெடு கொடுத்து, அதற்குள் முடிக்காவிடில் ராஜினாமா செய்ய வைப்போம் என்று உறுதி மொழி வெங்கட்டும்ஒருவராவது இத்தகைய உளறல்களை பேசுவாரா பார்க்கலாம்


முக்கிய வீடியோ