உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கடமைக்கு அளவே இல்லையா?

கடமைக்கு அளவே இல்லையா?

சென்னை, எண்ணுார் அனல்மின் நிலைய விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம், எர்ணாவூர் காமராஜர் திருமண மண்டபத்தில், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நடந்தது.இதில் கருத்துக்களை தெரிவிக்க, முன்பே பலர் பெயர் கொடுத்திருந்தனர். வரிசைப்படி, இணை சுற்றுச்சூழல் தலைமை பொறியாளர் வாசுதேவன், பொதுமக்களை பேச அழைத்தார்.கருத்து தெரிவிக்க வந்த வாலிபர் ஒருவரின் பெயரை கூறி பலமுறை அழைத்தும், அவரை காணவில்லை. அவரை மைக் அருகே போக விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியிருந்தனர். அவர் கையை உயர்த்தி கூச்சலிடவே, அனுப்பி வைக்குமாறு போலீசாரை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.இதை பார்த்த நிருபர் ஒருவர், 'முன்பதிவு செய்து கருத்து சொல்ல வந்தவரையே போக விடாம தடுக்குறாங்களே... போலீசின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
டிச 29, 2024 06:42

ஜால்றா, ஸ்தோத்திரம், புகழாரம் செய்யாது, யதார்த்தத்தைப் பேசுபவர் என்று தெரிந்ததும் அவரை தடுத்திருக்கிறார்கள் ஒருவேளை பேசப்போவதைக்கூட முன்பே தெரிவித்து அதில் எதிர்மறைக் கருத்திருந்தால் அடக்கி வைக்க உத்தரவாகி இருந்ததோ என்னவோ ?


முக்கிய வீடியோ