உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஊருக்கு தான் உபதேசம்!

ஊருக்கு தான் உபதேசம்!

சென்னை சைதாப்பேட்டையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் சார்பில் அமைக்கப்பட்ட மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இதில் பேசிய முதல்வர், 'பெண்கள் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்; அதிகாரத்தில் அமர வேண்டும்; உலக அறிவை பெற வேண்டும் என, பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு காரணம், பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமுதாயம் நிமிர்ந்து நிற்க முடியும். பெண் அடிமை தீர்ந்து, பெண் அதிகாரம் பெறும் மாற்றத்தை நோக்கி தமிழகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'மகனை துணை முதல்வராக்கியதற்கு பதிலா, தங்கை கனிமொழியை அந்த பதவியில் அமர வைத்துவிட்டு முதல்வர் இப்படி பேசினால் சல்யூட் அடிக்கலாம்...' என முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'அவங்க உபதேசம் எல்லாம் எப்பவும் ஊருக்கு மட்டும் தானே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தபடி நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
ஜன 08, 2025 20:44

கனிமொழிக்கு பார்லிமெண்டிலும் கட்சியிலும் இந்தளவாவது முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பதே மகனை துணைமுதல்வர் ஆக்கியதால் தான்.


V RAMASWAMY
ஜன 08, 2025 17:57

வெறும் கமெண்ட் அடிக்காமல், தேர்தலில் செயலில் kaattungal.


RAVINDRAN.G
ஜன 08, 2025 11:46

சொல்வது ஒன்று செய்வது ஒன்று. அதுவே திராவிட மாடல்


D.Ambujavalli
ஜன 08, 2025 06:45

பல்கலையில் பாடுபட்டுப் படிக்க வந்த பெண்களை வேறுவிதமாக கொடுமை செய்வோம், ஆனால் மகளிரை உயர்த்துவோம் என்ன ஒரு முரண்பாடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை