வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நான் தற்சமயம் கோவையில் வசிக்கிறேன். இதற்கு முன்பு கல்கத்தா, பம்பாய், சென்னை போன்ற நகரங்களில் பனி புரிந்து வந்தேன். எங்களது உறவினர்கள் கோவில்பட்டி, விருதுநகர், மற்றும் சாத்தூரில் உள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேல் நான் இவர்கள் கடையில் தான் சேவு வாங்குவேன். ஐந்து கிலோவிற்கு குறையாமல் வாங்கிச் சென்று, இது சாத்தூர் சேவு என்று கூறி, என்னுடைய நண்பர்களுக்கு கொடுப்பேன். அவர்கள் சாப்பிட்டுப் பார்த்து, நான் மறுபடியும் சாத்தூர் சென்றால், மீண்டும் வாங்கிவரும்படி சொல்வார்கள். நாங்கள் சில வருடங்களுக்கு முன், அமெரிக்காவில் வசிக்கும் எங்களது மகனைப் பார்க்கச் சென்றபோது, என் உறவினர் ஒருவர் மூலம் இவர் கடையிலிருந்து சேவு வாங்கிச் சென்றேன். அங்கே உள்ள எங்கள் மகனின் அமெரிக்க நண்பர்களும் இதை ருசி பார்த்து பாராட்டினார்கள். ஒருமுறை இவர்கள் கடையில் சேவு வாங்கினார்கள் என்றால், வேறு கடைக்கு செல்லமாட்டார்கள். நிறுவன உரிமையாளர்களுக்கும் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் சேவை மேலும் பல நூறு ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.
மேலும் செய்திகள்
கூடைகளால் பின்னிய வாழ்க்கை!
29-Aug-2025