உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி : மின்மாற்றி சுவிட்ச் லிவர் சீரமைப்பது எப்போது?

புகார் பெட்டி : மின்மாற்றி சுவிட்ச் லிவர் சீரமைப்பது எப்போது?

செய்யூர் அருகே வெடால் கிராமத்தில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.செய்யூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையோரத்தில், வயல்வெளி பகுதியில் உயர் அழுத்த மின்மாற்றி உள்ளது.இதன் வாயிலாக வயல்வெளியில் உள்ள 100க்கும் மேற்பட்ட மின் மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.இந்த மின்மாற்றியை இயக்கும் 'சுவிட்ச் லிவர்' பழுதடைந்து உள்ளதால், தற்போது நேரடியாக இணைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.மின்சாரத்தை துண்டிக்க வேண்டுமெனில், ஏரிக்கரை அருகே சென்று அங்குள்ள மின்மாற்றியில் துண்டிக்க வேண்டி உள்ளது.பழுதடைந்துள்ள மின்மாற்றி 'சுவிட்ச் லிவரை' சீரமைக்க வேண்டும்.-ம.பாபு, செய்யூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !