உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி : நெல்வாய்பாளையத்தில் நிழற்குடை வசதி வேண்டும்

புகார் பெட்டி : நெல்வாய்பாளையத்தில் நிழற்குடை வசதி வேண்டும்

பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் கிராமத்தில், கூவத்துார் - மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது. மதுராந்தகம், செங்கல்பட்டு, கூவத்துார், செய்யூர் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், இங்கு நின்று செல்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் இங்கு அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை, பழுதடைந்து உள்ளது. இதனால் பேருந்திற்காக காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நெல்வாய்பாளையத்தில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - இ.கணேசன், பவுஞ்சூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை