மின்கம்பத்தை சூழ்ந்த கொடிகளை அகற்ற வேண்டும்
திருப்போரூர் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சி, சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலையில், வீரபத்திரர் கோவில் அருகில் உள்ள மின் கம்பத்தில் கொடிகள் சூழ்ந்து உள்ளன. மழை பெய்யும் போதும், தீப்பொறிகள் எழுகின்றன. எனவே இவற்றை அகற்ற, மின் வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.சரவணன், சிங்கபெருமாள் கோவில்