கடலுார் புகார் பெட்டி: காத்திருப்போர் கூடம் பாழ்
காத்திருப்போர் கூடம் பாழ் பாலுார் பல்லவராயநத்தம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள இறுதி சடங்கு செய்யும் காத்திருப்போர் கூடம் வைக்கோல் அடுக்கி வைக்கும் இடமாக மாறி உள்ளது. ராதாமணி, பாலுார். -பஸ்களால் விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் பஸ்களை தாறுமாறாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. பாண்டியன், விருத்தாசலம்.