காஞ்சிபுரம் : புகார் பெட்டி; கழிவுநீரால் கொசு தொல்லை
கழிவுநீரால் கொசு தொல்லை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அதியமான் நகர், சாம்பமூர்த்தி நகரில், பாதாள சாக்கடை பணியின் காரணமாக, மழைநீர் கால்வாய் அடைக்கப்பட்டு, கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கழிவுநீரால், கொசுக்கள் உருவாவது மட்டுமல்லாமல், துர்நாற்றம் வீசுகிறது.எங்கள் பகுதியில் வசிப்போருக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. உடனடியாக, மழைநீர் கால்வாயை சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வி.நந்தகுமார், காஞ்சிபுரம்.