/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையோரம் பாழடைந்த கிணறு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையோரம் பாழடைந்த கிணறு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையோரம் பாழடைந்த கிணறு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம், திருவீதிபள்ளம், கிருஷ்ணசாமி நகர் பிரதான சாலையோரம், பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோாரம் ஒதுங்கும்போது நிலைதடுமாறி திறந்தவெளி கிணற்றில் விழும் நிலை உள்ளது. இப்பகுதியில் ஓடி ஆடி விளையாடும் சிறுவர்களும், இவ்வழியாக செல்லும் ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளும் கிணற்றில் விழும் நிலை உள்ளது.எனவே, திருவீதிபள்ளத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பயன்பாடின்றி உள்ள பாழடைந்த திறந்தவெளி கிணற்றை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.முத்துகுமார்,காஞ்சிபுரம்.