/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையோரம் சாய்ந்த மின் கம்பம் சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையோரம் சாய்ந்த மின் கம்பம் சீரமைக்கப்படுமா?
சாலையோரம் சாய்ந்த மின் கம்பம் சீரமைக்கப்படுமா?
குன்றத்துார் ஒன்றியம், ஆதனுாரில் இருந்து, கொருக்கந்தாங்கல் வழியாக, நீலமங்கலம், ஒரத்துார், குத்தானுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையோர மின் கம்பம் சாய்ந்து, விபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சாலையோரம் அபாய நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க, மின் வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி. முத்துராஜ்,கொருக்கந்தாங்கல்.